Published : 13 Sep 2014 11:02 AM
Last Updated : 13 Sep 2014 11:02 AM
பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்குவிகிதத்தை 52 சதவீதமாக குறைப்பதற்கான வரைவு அறிக்கையை நிதி அமைச்சகம் தயாரித்திருக்கிறது. அது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
2010-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை பொதுத்துறை வங்கியில் மத்திய அரசின் பங்கினை 58 சதவீதமாக குறைப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கடுத்து 58 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக குறைப்பதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சகம் எடுத்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து துறை அமைச்சகங்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிகிறது.
இருந்தாலும் சட்டப்படி பொதுத்துறை வங்கிகளில் 51 சதவீதத்துக்கும் கீழாக எந்த ஒரு சமயத்திலும் அரசாங்கத்தின் பங்கினை குறைக்க முடியாது. பேசல் 3 விதிமுறையை பின்பற்ற 2018-ம் ஆண்டுக்குள் பொதுத்துறை வங்கிகளுக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு 11,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT