Published : 07 Mar 2018 09:54 AM
Last Updated : 07 Mar 2018 09:54 AM

முதலீட்டாளர்களுக்கு 5 நாளில் ரூ.4.30 லட்சம் கோடி இழப்பு

கடந்த ஐந்து வர்த்தக தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.4.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் ரூ.1.54 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 430 புள்ளிகள் சரிந்து முடிந்தது. மூன்று மாதங்களில் இல்லாத அளவு க்கு 33317 என்னும் புள்ளியில் முடிவடைந்தது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1129 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. பிஎஸ்இ-யில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஐந்து நாளில் ரூ.4.30 லட்சம் கோடி சரிந்து ரூ.144 லட்சம் கோடியாக இருக்கிறது. நேற் றைய வர்த்தகத்தில் வங்கி பங்குகள் அதிகம் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x