Published : 29 Mar 2018 09:08 AM
Last Updated : 29 Mar 2018 09:08 AM
சர்வதேச வர்த்தக சபையின் (ஐசிசி) இந்தியப் பிரிவு தலைவராக கேமியோ கார்ப்பரேஷன் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்றுள்ளார்.
ஐசிசி-யின் ஆண்டு கூட்டத்தில் இவர் தலைவர் பொறுப்பை ஏற்றார். சர்வதேச வர்த்தகத்தில் மிக முக்கிய அமைப்பாக ஐசிசி திகழ்கிறது. சர்வதேச அளவில் இந்த அமைப்பில் 100 நாடுகளில் 60 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 1923-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த தீர்ப்பாயம் சர்வதேச அளவில் முன்னணி தீர்ப்பாயமாக விளங்குகிறது.
ஓஎன்ஜிசி, ஸ்பிக், சிகால் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் ஜவஹர் வடிவேலு பணியாற்றியுள்ளார். தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவராகவும், ஃபிக்கி அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT