Published : 21 Mar 2018 08:50 AM
Last Updated : 21 Mar 2018 08:50 AM

வங்கி வாரியக் குழுவின் பரிந்துரைகளுக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை: பிபிபி தலைவர் வினோத் ராய் குமுறல்

வங்கி வாரியக் குழு (பிபிபி) அளித்த பரிந்துரைகளுக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதன் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

வங்கி வாரியக் குழுவுக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையே மிகப்பெரிய தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத் ராய் தற்போது வங்கி வாரியக் குழுவின் தலைவராக உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த நிதி முறைகேடு தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில் ரிசர்வ் வங்கியின் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வங்கி வாரியக் குழுவின் தலைவரான வினோத் ராயும், இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அரசு உண்மையிலேயே கருதும்பட்சத்தில் வங்கி வாரியம் அளித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதேபோல வங்கி வாரியத்துக்கும், அரசுக்கும் இடையே ஆரோக்கியமான உறவு நிலவ வேண்டும் என்றும் ராய் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி நிதி அமைச்சகத்துக்கு சிலபரிந்துரைகளை அனுப்பினோம். ஆனால் அது குறித்து எவ்வித பதிலையும் நிதி அமைச்சகம் அனுப்பவில்லை என்றும் வங்கி வாரியம் தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x