Published : 01 Apr 2019 07:05 AM
Last Updated : 01 Apr 2019 07:05 AM

ஆதார்-பான் இணைப்புக்கு 6 மாதம் அவகாசம்

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கடைசிதேதி மார்ச் 31 எனக் கூறப்பட்டது.

இந்தக் கெடு தேதி நெருங்கிவிட்ட நிலையிலும் பலர் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வில்லை. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண் அங்கீகரிக்கப்படாது எனக் கூறப்பட்டது. இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கெடு தேதியை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு கெடு தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x