Last Updated : 25 Apr, 2019 09:15 PM

 

Published : 25 Apr 2019 09:15 PM
Last Updated : 25 Apr 2019 09:15 PM

உலகின் மதிப்பு மிக்க நிறுவனம்: அமேசான், ஆப்பிளை முந்திய மைக்ரோசாஃப்ட்

1 ட்ரில்லியன் டாலர்கள் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உயர்ச்சி பெற்று அமேசான், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாகி சாதனை படைத்துள்ளது.

 

இந்தக் குறியீட்டு மைல்கல்லை மைக்ரோசாப்ட் முதல் முறையாக எட்டியது, ஆனால் இந்த மைல்கல்லை எட்டும் 3வது டெக்னாலஜி மகாநிறுவனமாகும் மைக்ரோசாப்ட்.

 

இந்தத் தகவல்களை அடுத்து அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் பங்குகளின் விலை 5% அதிகரித்து 130.59 டாலர்களாக அதிகரித்தது.

 

இன்றைய தினத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு நிறுவனமாகும், இதில் அமேசான், ஆப்பிள் நிறுவனங்களை முந்தியுள்ளது.

 

கடந்த மார்ச் 31ம் தேதி முடிந்த காலாண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லாபம் 19% அதிகரித்து 8.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அதாவது மொத்த வருவாயான 30.8 பில்லியன் டாலர்களில் 8.8 பில்லியன் டாலர்கள் லாபம், இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 14% அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x