Published : 06 Mar 2019 03:01 PM
Last Updated : 06 Mar 2019 03:01 PM

வருகிறது 5ஜி போன்: ஜூன் மாதம் முதல் அலைவரிசை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தீவிரம்

நாடுமுழுவதும் 5ஜி மொபைல் போன் அலைவரிசை ஒதுக்கீடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தென் கொரியா போன்ற முன்னேறிய நாடுகளில் 5ஜி சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சீனா இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 4ஜி நெட்வொர்க்கில் விநாடிக்கு 1ஜிபி என்ற அளவில் பெறும் பதிவிறக்க வேகத்தை 5ஜி தொழில்நுட்பத்தில் விநாடிக்கு 20ஜிபியாக அதிகரித்துத் தர முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால், இந்தியாவில் தற்போதுதான் 3ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு வாடிக்கையாளர்கள் படிப்படியாக மாறி வருகின்றனர். இதனால், 5ஜி சேவை அறிமுகம் இந்தியாவில் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்குளும் 5ஜி போன்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.

சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் 5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரித்துள்ளன. சாம்சங் கேலக்சி எஸ்.10  என்ற 5ஜி மொபைல் போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. சாம்சங் ஏப்ரல் மாதத்தில் 5ஜி போன் விற்பனையை தொடங்கும் எனத்  தெரிகிறது.

இந்தநிலையில் 5ஜி மொபைல் போன் அலைவரிசை ஒதுக்கீடு  இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. முதல்கட்டமாக அலைவரிசையை ஏலத்தில் விடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதனுடன் கூடவே அலைவரிசை வேகத்தை சோதித்து பார்க்கும் வசதிகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தொலைத்தொடர்புத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x