Published : 21 Mar 2019 07:31 AM
Last Updated : 21 Mar 2019 07:31 AM
கார் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணியில் திகழும் ஜப்பானிய நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இது தொடர் பான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங் களும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி சுஸுகி தயாரித்த எஸ்யுவி விடாரா பிரீஸா மாடல் 2022-ம் ஆண்டில் டொயோட்டா ஆலையில் தயாராகும் என்று தெரிகிறது.
இரு நிறுவனங்களும் தங்களது இணைந்த செயல்பாடுகளை ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவில் உள்ள டொயோi்டா ஆலையில் சியாஸ், எர்டிகா மாடல் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை சுஸுகி அளிக்கும். அதேபோல இந்தியாவில் உற்பத்தியாகும் பலெனோ, பிரீஸா, சியாஸ், எர்டிகா மாடல்களை டொயோடா நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை செய்வதற்கு அனுப்பும் என்று இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இரு நிறுவனங்களும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதெனவும் முடிவு செய்துள்ளன.
சுஸுகி நிறுவனம் தயாரித் தளிக்கும் காம்பாக்ட் வாகனங்களுக் கான இன்ஜினை, டென்சோ மற்றும் டொயோடா வாகனங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. இவை போலந்தில் உள்ள டொயோடா ஆலையில் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக டொயோட்டா நிறுவனம் பேட்டரி வாகன தொழில்நுட்பத்தை சுஸுகி நிறுவனத்துக்கு அளிக்கும்.
இந்தியாவில் பலெனோ, விடாரா பிரீஸாவை டொயோட்டாவுக்கு சுஸுகி அளிக்கும். அதேபோல டொயோட்டா நிறுவனம் கொரோலா செடானை சுஸுகி நிறுவனத்துக்கு அளிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT