Published : 11 Mar 2019 10:54 AM
Last Updated : 11 Mar 2019 10:54 AM

தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளுக்கு 8% பொருளாதார வளர்ச்சிக்கான மாதிரி திட்ட அறிக்கை: இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) வெளியீடு

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப் பட உள்ள நிலையில் இந்தியத் தொழில் துறை கூட்டமைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சியை அடைய வழிவகுக்கும் திட்டங்களைக் கொண்ட அறிக்கையை அரசியல் கட்சிகளுக்குப் பரிந்துரை செய் துள்ளது.

வரும் மே மாதம் பொதுத் தேர் தல் நடக்க உள்ளது. அடுத்து வரவுள்ள அரசுக்குப் பரிந்துரைக்கும் வகையில், மாதிரி தேர்தல் திட்ட அறிக்கை ஒன்றை இந் தியத் தொழில்துறை கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற நிலையை எட்டுவதற்கு வழிவகுக்கும் செயல் திட்டங்களை இந்த அறிக்கை யில் தயார் செய்து கொடுத்துள் ளது.

இதில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்ட அறிக்கை குறித்து சிஐஐ இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது, “இந்த திட்ட அறிக்கை பலதரப்பட்ட துறை நிபுணர்கள், தொழில்துறை கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. 2022-ல் இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

அப்போது இந்தியத் தொழில் துறை வலுவா கவும், ஆண்டுக்கு 8% என்ற சிறப்பான பொருளாதார வளர்ச்சியையும், உலக அரங்கில் தொழில்நுட்பத்திலும், வர்த்தகத் திலும் முன்னணியில் இருக்கும் வகையிலான செயல்திட்டங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள பரிந்துரை களை அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய தேர் தல் அறிக்கைகளில் இவற்றை சேர்த்துக்கொள்ளும் என்ற நம் பிக்கை உள்ளது” என்றார்.

இந்த மாதிரி தேர்தல் அறிக்கை பெரும்பாலான தேசிய, மாநில அரசியல் கட்சிகளுடனும் பகிரப் பட்டுள்ளதாக சிஐஐ தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x