Published : 17 Sep 2014 06:16 PM
Last Updated : 17 Sep 2014 06:16 PM

முதல் பிறந்தநாள்

எங்கள் வீட்டுச் செல்லத்தின் முதல் பிறந்த நாளை எதிர்பார்த்து, விடியவிடியக் காத்திருந்ததன் பலன் நிறைவாகக் கிடைத்தது. வழுவழுப்பான காகிதத்தில், நேர்த்தியான வடிவமைப்பில் வரலாற்றின் பெருவிருட்சத்திலிருந்து எழுந்த வெளிச்சத்தை உள்வாங்கி, உள்ளே ஒட்டுமொத்த கருத்துப் பேழைகளைத் திறந்து படித்து முடித்தபோது, மனதில் எழுந்த நிறைவு சொல்லில் அடங்காது.

முதலாம் ஆண்டு பரிசாகப் போட்டியுடன், சுபாவின் வெட்டிவேரு வாசம் சுவாசத்தை நிறைத்து மனதில் புத்துணர்வைத் தருகிறது. கர்னாடக சங்கீதத்தின் ஆன்மாவான எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவுப் பகிர்வுகள் நெஞ்சில் நெகிழ்வைத் தந்தன.

- சுபா தியாகராஜன்,சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x