Published : 26 Feb 2019 08:31 AM
Last Updated : 26 Feb 2019 08:31 AM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது உள்ளதைக் காட்டிலும் 12 சதவீத அளவுக்கு உயரும் என்று கோல்டுமேன் சாக்ஸ் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் கணித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் (ஓபெக்) இடம்பெற்றுள்ள சவூதி அரேபியா எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே எண்ணெய் உற்பத்தியை குறைத்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரும் காலங்களில் பீப்பாய்க்கு 70 டாலர் முதல் 75 டாலர் வரை உயரும் என்று நிறுவனத்தைச் சேர்ந்த ஜெப்ரி கியூரி தெரிவித்துள்ளார்.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கச்சா எண்ணெய் தாராளமாக கிடைப்பதை பெரும்பாலான நாடுகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கும் என்பதால் கண்டிப்பாக விலை உயரும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேசமயம் இந்த ஆண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர் வரை குறையவும் வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
சவூதி அரேபியா நாளொன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளது. இது மார்ச் மாத இலக்காகும். அதேசமயம் வெனிசுலாவிலிருந்து ஏற்றுமதியாக வேண்டிய 1 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் முற்றிலுமாக நின்று போயுள்ளது. இதன் காரணமாக விலை உயரும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT