Published : 21 Feb 2019 09:57 AM
Last Updated : 21 Feb 2019 09:57 AM

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் லாக்ஹீட் மார்டின் - டாடா இணைந்து: எப்-21 போர் விமானங்கள் தயாரிப்பு

அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக எப்-21 விமானங்களை `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரித்து அளிக்க முடிவு செய்துள்ளது. இந்திய விமானப் படையில் எப்-21 ரக போர் விமானங்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்தியாவின் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விமானங்களை பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க உள்ளதாக பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா 2019 கண்காட்சியில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாக் ஹீட் மார்டின் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் இணைந்து எப்-21 விமானங்களை தயாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்திய விமானப் படைக்கு எப்-16 ரக விமானங்களை வழங்குவதாக முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது எப்-21 ரக விமானங்கள் இந்திய விமானப் படைக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதால் இவற்றை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்-21 ரக விமானம் உள்புறம் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்டது என்று லாக்ஹீட் மார்டின் நிறுவன உத்திசார் மற்றும் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் விவேக் லால் தெரிவித்தார்.

இந்திய விமானப் படைக்கு அதி நவீன எப்-21 ரக விமானங்களை சப்ளை செய்வதன் மூலம் இந்திய அமெரிக்க கூட்டுறவு மேலும் வலுப்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

லாக் ஹீட் நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளது இரு தரப்புக்கும் பலனளிக்கும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x