Published : 18 Feb 2019 02:45 PM
Last Updated : 18 Feb 2019 02:45 PM

தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலையும் உயர்வு

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இன்று கிராம் ஒன்று3 ஆயிரத்து 196 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது பொருளாதாரம் மந்தநிலை உள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு பங்குசந்தையை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க பொருளாதார மந்தம் காணப்படுவதால் அந்நாட்டு முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. எனினும் மூன்று நாட்களுக்கு முன்பு சற்று சரிவு ஏற்பட்டது.

இந்தநிலையில் தங்கம் விலை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக தற்போது விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,196-க்கு விற்கப்படுகிறது. அதுபோலவே, 22 காரட் தங்கம் சவரன் ஒன்றின் விலை, 48 ரூபாய் அதிகரித்து 25 ஆயிரத்து 568 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x