Published : 31 Jan 2019 07:39 PM
Last Updated : 31 Jan 2019 07:39 PM
நாடுமுழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.
ஜிஸ்டி வரி வசூலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நவம்பர் மாதம் 30ஆம் தேதி யில் மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியது. இது அக்டோபர் மாதத்தைவிட, 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.
பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாலும், விலக்கு அளிக்கப்படுவதாலும் வசூல் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தநிலையில், இந்த ஆண்டு, ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், ஜிஎஸ்டி வசூல், ரூ.94,725 கோடியாக இருந்தது. வரிச்சலுகை மூலம் நுகர்வோரின் சுமையை குறைந்துள்ளபோதிலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT