Published : 09 Jan 2019 10:22 AM
Last Updated : 09 Jan 2019 10:22 AM
மரபணு மாற்றம் செய்யப்பட்ட (ஜிஎம்) விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் தனது ஜிஎம் விதைக்கு காப்புரிமை கோர உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மான்சான்டோ நிறுவனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் ஏஜி நிறுவனம் வாங்கியது. ஆனால் அந்நிறுவனத்தால் ஜிஎம் பருத்தி விதைக்கான காப்புரிமை கோர முடிய வில்லை. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மான்சான்டோ நிறுவனத் துக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜிஎம் விதைக்கு காப்புரிமை கோரலாம் என கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பு மான்சான்டோ, பேயர், டூபான்ட் மற்றும் சைன்ஜென்டா ஆகிய நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
சர்வதேச நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் விடுவிக்காமல் இருந்தன. இப்போது காப்புரிமை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் இப்பிரச்சினையில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாக நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த உத்தரவைத் தொடர்ந்து மான்சான்டோ பங்கு விலை கடந்த செப்டம்பர் மாதத்துக்குப்பிறகு தற்போது மிக அதிக அளவுக்கு உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT