Published : 29 Jan 2019 10:11 AM
Last Updated : 29 Jan 2019 10:11 AM

பொழுதுபோக்கு துறை ரூ. 3.73 லட்சம் கோடியாக வளரும்

இந்திய ஊடக மற்றும் பொழுது போக்கு துறை 2022-ம் ஆண்டில் ரூ. 3.73 லட்சம் கோடியாக வளரும் என அசோசம்-பிடபிள்யுசி இணைந்து நடத்திய ஆய்வு மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதன் விளைவால், 2022-ல் இந்திய டிஜிட்டல் பொழுதுபோக்கு தளங்களின் சந்தை மதிப்பு ரூ. 5,363 கோடியாக இருக்கும் என்றும், உலகின் முன்னணி 10 துறைகளில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை ஆண்டுக்கு 11.7 சதவீதத்தில் வளரும் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x