நேரடி வரி வருவாய் 14% உயர்வு: ஏப்ரல் - டிசம்பர் வருமானம் ரூ. 8.74 லட்சம் கோடி

நேரடி வரி வருவாய் 14% உயர்வு: ஏப்ரல் - டிசம்பர் வருமானம் ரூ. 8.74 லட்சம் கோடி
Updated on
1 min read

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் நேரடி வரி வருமானம் 14 .1 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் மொத்த வரி வருவாய் ரூ. 8.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ. 1.30 லட்சம் கோடி ரீபண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் அளிக்கப்பட்ட ரீபண்ட் தொகையை விட 17 சதவீதம் அதிகமாகும். ரூ. 3.64 லட்சம் கோடி அட்வான்ஸ் வரியாக வசூலாகியுள்ளது.

ரீபண்ட் அளிக்கப்பட்ட தொகைக்குப் பிறகு அரசுக்கு கிடைத்த நிகர வரி வருமானம்ரூ.7.43 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13.6 சதவீதம் கூடுதலாகும். பட்ஜெட் மதிப்பீட்டில் மொத்த வரி வருவாயில் நேரடி வரி வருவாய் பங்களிப்பு 64.7 சதவீதமாகும். 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ. 11.50 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த வரி வருவாயில் நிறுவன வரி 14.8 சதவீதமாகும். தனிநபர் வரி வருமானம் 17.2 சதவீதமாகும். கார்பரேட் வரி வருமானம் 16 சதவீதம் அதிகரித் துள்ளது. அதேபோல தனி நபர் வரி வருமானம் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016ஆண்டில் தாமாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம் (ஐடிஎஸ்) அறிமுகம்செய்யப்பட்டது. இதனால் கடந்த நிதி ஆண்டில் ரூ. 10,844 கோடி வரி வருவாய் கூடுதலாகக் கிடைத்தது. அது இந்த நிதி ஆண்டில் இடம்பெறாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in