Published : 04 Jan 2019 09:37 AM
Last Updated : 04 Jan 2019 09:37 AM

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ. 2.6 லட்சம் கோடி நிதி குவிப்பு

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங் கள் 2018-ல் ரூ.2.6 லட்சம் கோடி நிதித் திரட்டி சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுவருகின்றன. தொடர்ந்து சர்வதேச நாடுகளிலிருந்து இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறு வனங்களுக்கு முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

2018-ல் மட்டும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ரூ. 2.6 லட்சம் கோடி நிதித் திரட்டியுள்ளன. இதில் பிளிப்கார்ட் மட்டுமே ரூ.1.12 லட்சம் கோடி நிதியை வால்மார்ட் டிடம் இருந்து திரட்டியுள்ளது. இதுபோக, ஸ்விக்கி நிறுவனம் ரூ. 9 ஆயிரம் கோடியும், ஓயோ நிறுவனம் ரூ.7,000 கோடியும் நிதித் திரட்டியுள்ளன. பேடிஎம் மால், ரீநியூ பவர், பைஜூஸ் மற்றும் சொமட்டோ ஆகியவையும் குறிப்பிடத்தக்க அளவில் நிதித் திரட்டியுள்ளன.

2018-ல் கிட்டதட்ட 1,000 தொழில் ஒப்பந்தங்கள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக இ-காமர்ஸ், பைனான்ஸ் சேவை ஆகியவை அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் துறைகளாக விளங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x