Published : 05 Dec 2018 09:15 AM
Last Updated : 05 Dec 2018 09:15 AM
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிச் சந்தையில் வாங்கும் எல்ஐசி நடவடிக்கையில் அரசு பங்கேற்காது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ஐடிபிஐ வங்கியின் ஒரு பங்கை ரூ. 61.73 என்ற விலையில் வாங்குவதென எல்ஐசி முடிவு செய்தது. இதன் மூலம் 26 சதவீத பங்குகளை வாங்கும் நடவடிக்கை டிசம்பர் 3 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற உள்ளது.
கடந்த அக்டோபரில் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை ரூ. 61.73 என்ற விலையில் வாங்கப் போவதாக எல்ஐசி அறிவித்தது. மொத்தம் 26 சதவீத பங்குகளை ரூ. 12,602 கோடி செலவிட்டு வாங்கப் போவதாக அறிவித்தது.
இது தொடர்பாக டிசம்பர் 3-ம் தேதி ஐடிபிஐ வங்கி வெளி யிட்ட கடிதத்தில் வெளிச் சந்தை யில் பங்குகளை வாங்கும் எல்ஐசி -யின் முடிவில் மத்திய அரசு பங் கேற்காது என தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற ஐடிபிஐ வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் எல்ஐசி நிறுவனத்துக்கு 26 சதவீத பங்குகளை விற்பனை செய்து அதன் பங்கு அளவை 51 சதவீதமாக உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி 33.98 கோடி சம பங்குகளை ரூ. 61.73 என்ற விலையில் விற்பதெனவும், முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஒரு பங்கு ரூ. 51.73 என்ற விலையில் ரூ. 2,098.19 கோடிக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT