Published : 01 Dec 2018 10:54 AM
Last Updated : 01 Dec 2018 10:54 AM
அமெரிக்காவில் பங்குச்சந்தை அடிப்படையில் அதிக சொத்து கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக முதன்முறையாக ஆப்பிள் நிறுவனத்தினத்தை பின்னுக்கு தள்ளி மைக்ரோசாப்ட் முன்னேறியுள்ளது.
பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் விற்பனை அடிப்படையில் அதன் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் மொபைல்போன் உள்ளிட்ட எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் ஆகியவை 10 ஆண்டுகளாகவே கோலாச்சி வருகின்றன.
அமெரிக்காவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பங்குச்சந்தைகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த புதன் கிழமை அன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் நிறுவத்தை விட அதிகரித்தன. இது குறிப்பிட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இரு நிறுவனங்களுக்கும் இடையே சொத்து மதிப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டி நிலவினாலும் முதல் இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்து வந்தது ஆப்பிள்.
இந்தநிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஆப்பிளை விட உயர்ந்தது பங்கு வர்த்தக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்துவாரத்தின் இறுதிநாளன நேற்று வர்த்தக நேர இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகள் மதிப்பு சுமார் 63 லட்சம் கோடியாக முதலிடத்தில் இருந்தது.
இரண்டாவது இடத்தில் 62 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 61 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 3வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT