Published : 19 Dec 2018 09:00 AM
Last Updated : 19 Dec 2018 09:00 AM
ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ரிபப்ளிக் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், 99 சதவீத பொருட் கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஜிஎஸ்டியை மேலும் எளிமையாக் குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந் தது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின்பு இது மேலும் 55 லட்சம் அதிகரித்துள்ளது. இனிமேல் ஆடம் பர பொருட்கள் மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. 99 சதவீத பொருட் கள் அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட் களும் 18 சதவீத ஜிஎஸ்டி வரம் பின் கீழ் அல்லது அதற்கும் குறைவான சதவீதத்திற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி எளிமையானதாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் ஜிஎஸ்டி மாநி லங்களின் மதிப்பு கூட்டு வரி, கலால் வரி அடிப்படையில்தான் செயல் படுத்தப்பட்டது. இது தொடர்பாக பல முறை ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஜிஎஸ்டி அமைப்பில் பல்வேறு முன்னேற்றங் கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் ஜிஎஸ்டியை அமல்படுத்தும்படி நீண்ட காலமாக கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஜிஎஸ்டி அமலாக் கம் வர்த்தக சந்தையில் முரண் பாடுகளை நீக்கியுள்ளது. மேலும், அந்த அமைப்பின் திறனை மேம் படுத்தியுள்ளது. இந்திய பொருளா தாரம் வெளிப்படையான தன் மைக்கு மாறி வருகிறது.
அரசு அனைத்து இல்லங்களுக் கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க முயற்சி எடுத்து வருகி றது. புதிய இந்தியாவை உருவாக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT