Published : 22 Dec 2018 09:12 AM
Last Updated : 22 Dec 2018 09:12 AM
இந்தியாவின் மிகச்சிறந்த பிராண்டாக சாம்சங் மொபைல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தலைசிறந்த பிராண்டுகளை தேர்வு செய்ய டிஆர் ஏ ரிசர்ச் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் முன்னணி 20 பிராண்டுகளின் வரிசையில் முதல் இடத்தை சாம்சங் மொபைல் பிடித்துள்ளது. தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த ஜியோ நிறுவனம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து டிஆர்ஏ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரமெளலி கூறுகையில், சாம்சங் நிறுவனம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையில் மொபைல் போன்களை விற்பனை செய்கிறது. இந்த வேறுபட்ட மாடல் மொபைல்கள் மூலம் நிறுவனம் பிற மொபைல் நிறுவனங்களிடமிருந்து தனித்து நிற்க உதவுகிறது. ஜியோ அதன் இண்டர்நெட் சேவை மூலம் மக்களிடம் பிரபலமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
இரண்டாம் இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் ஆப்பிள் ஐ போனும், ஐந்தாம் இடத்தில் மாருதிசுசூகியும் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT