பேங்க் வேலையை முடித்துக்கொள்ளுங்கள்: வேலை நிறுத்தம், விடுமுறையால் வங்கிகள் 5 நாட்கள் முடங்கும்

பேங்க் வேலையை முடித்துக்கொள்ளுங்கள்: வேலை நிறுத்தம், விடுமுறையால் வங்கிகள் 5 நாட்கள் முடங்கும்
Updated on
1 min read

வேலை நிறுத்தம், விடுமுறை போன்ற காரணங்களால் அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை வெள்ளிக்கிழமை (21-ம் தேதி) வங்கி அதிகாரிள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருப்பதால், வங்கிகள் செயல்படாது. நாளை 22-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை வழக்கம் போல் வங்கிகள் விடுமுறை, 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படும்.

24-ம் தேதி வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். அதன்பின் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. 26-ம் தேதி ஐக்கிய வங்கி யூனியன் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால், அன்றும் வங்கிகள் செயல்படாது. ஆகவே, நாளை முதல்(21-ம் தேதி) 26-ம் தேதிவரையில் 24-ம் தேதியைத் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் வங்கிகள் செயல்படாது.

எனவே மக்கள் இதற்கு ஏற்றவாறு தங்கள் வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்ளலாம். நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தின் போது ஏடிஎம் செயல்பாடு எந்த வித்ததிலும் முடங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 260ம் தேதி ஏடிஎம் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in