Published : 19 Nov 2018 08:55 AM
Last Updated : 19 Nov 2018 08:55 AM

கூகுள் கிளவுட் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் குரியன் நியமனம்

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவு தலைவராக இந்தியரான தாமஸ் குரியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவராவர்.

இது தொடர்பாக கூகுள் நிறு வனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

கூகுளின் கிளவுட் பிரிவுக்கு தாமஸ் குரியன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் டயானா கிரீன் இந்த பொறுப்பில் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளது. டயானா தனது செய்தியில், தாமஸ் குரியன் நவம் பர் 26-ம் தேதி கூகுள் நிறுவனத்தில் இணைய உள்ளார். 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து பணி யினை தொடங்குவார் என்றும், கூகுள் கிளவுட் தொழிலை அடுத்த கட்டத்துக்கு குரியன் கொண்டு செல்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குரியன் ஆரக் கிள் நிறுவனத்தில் 22 ஆண்டு கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இறுதியாக தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

டாயனா நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரியாக தொடர உள்ளார். இவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்து கிளவுட் பிரிவினை கவனித்து வந்தார். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

குரியன் கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பிறந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x