Published : 27 Nov 2018 10:11 AM
Last Updated : 27 Nov 2018 10:11 AM
இந்தியப் பொருளாதார வளர்ச் சிக்கு நீர் மேலாண்மையும் நீர் மறுசுழற்சியும் மிகவும் அவசியம் என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இயற்கை வளங் களுக்கு மகத்தான பங்கு உண்டு. அதில் முக்கியமானது நீர். ஆனால் சமீப காலங்களில் மிகப்பெரும் நீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே நீர் மேலாண்மை மற்றும் நீர் ஆதாரங்களை மறுசுழற் சிக்கு உட்படுத்துவதும் அவசியம் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமி தாப் காந்த் கூறினார்.
நீர் மேலாண்மை திறன் கட்ட மைப்பு திட்டம் குறித்த கருத்தரங்கில் பேசிய அமிதாப் காந்த், இது குறித்து மேலும் கூறியதாவது, “நீர் தட்டுப் பாடு அதிகரித்து வருகிறது. எனவே நீருக்கான சரியான விலையை நிர்ணயிக்க வேண்டும். இல்லை யென்றால் மக்கள் அதற்கான மதிப்பைப் புரிந்துகொள்ள மாட்டார் கள். நகரங்களில் 30 சதவீதமும், கிராமங்களில் 70 சதவீதமும் நிலத் தடி நீரை நம்பியிருக்கிறார்கள். ஆனால் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. 75 சதவீத வீடுகளில் குடிப்பதற்கான நீர் கிடைப் பதில்லை. வெளியிலிருந்துதான் வாங்குகிறார்கள். இந்தியாவின் நீர் மறுசுழற்சி திறன் வெறும் 30 சதவீதமாக உள்ளது” என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மை அமைச்சகத்தின் செய லர் பரமேஸ்வரம் ஐயர், இந்தியா நீர் மேலாண்மை குறித்து சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
நீர் மேலாண்மையைப் பொருத்த வரை அதன் அவசியம் மிக முக்கிய மானதாக உள்ளது. எனவே தட்டுப் பாட்டை சமாளிக்கும் வகையி லான சேமிப்பு திட்டங்கள், செயல் திறன்மிக்க விநியோக கட்டமைப் புகள், நீர் சுத்திகரிப்பு முறைகள் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் பெரும்பாலும் தண் ணீர் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், மக்கள் நல்ல தண்ணீருக் காக செலவு செய்ய தயாராக உள்ள னர். தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன என்று அமிதாப் காந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT