Published : 02 Nov 2018 09:30 AM
Last Updated : 02 Nov 2018 09:30 AM

தொழில் புரிவதற்கு எளிதான சூழல் நிலவும் நாடுகளில் 3 ஆண்டுகளில் இந்தியா 25 இடங்களுக்குள் முன்னேறும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் நம்பிக்கை

உலக நாடுகளில் தொழில் புரிவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் 25 இடங்களுக்குள் முன்னேறும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆண்டுதோறும் உலக வங்கி வெளியிடும் தொழில் புரிய ஏதுவான நாடுகள் பட்டியில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்தியா 50 இடங்களுக்குள் முன்னேறும் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த ஒருநாடும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 23 இடங்கள் முன்னேறியிருக்க முடியாது. மூன்றுஆண்டுகளில் 65 இடங்கள் இந்தியா முன்னேறியுள்ளது என்ற அவர் 5 ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் இந்தியா முன்னேற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு உலக வங்கிவெளியிட்ட பட்டியலில் இந்தியா100-வது இடத்தில் இருந்தது. அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் பொதுத்தேர்தலை உத்தேசித்து கடுமையாக எதிர்த்துவரும் சூழலில் தொழில் தொடங்கஉகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x