Published : 02 Nov 2018 09:28 AM
Last Updated : 02 Nov 2018 09:28 AM

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாதம்  ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரண்டாவது முறையாக வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பதிவில், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.  இதில் மத்திய அரசுக்கான வரி (சிஜிஎஸ்டி) ரூ.16,464 கோடியாகும். மாநில அரசுக்கான எஸ்ஜிஎஸ்டி பங்கு  ரூ. 22,826 கோடியாகும். ஐஜிஎஸ்டி ரூ.53,419 கோடியாகும். சுங்க வரி வசூல் ரூ.8,000 கோடியாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாத வரி வசூல் அதற்கு முந்தைய மாதத்தை விட 6.64 சதவீதம் அதிகமாகி உள்ளது. மொத்த வரிவசூலில் சில மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக கேரளா 44 சதவீத வரிதாரர்களை கொண்டுள்ளது. ஜார்கண்ட் 20 சதவீதம், ராஜஸ்தான் 14 சதவீதம், உத்தரகாண்ட் 13 சதவீதம்,  மஹாராஷ்டிரம் 11 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளன.

செப்டம்பர் மாத இறுதி வரை 67.45 லட்சம்  ஜிஎஸ்டிஆர் படிவம் 3 தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  ஜிஎஸ்டி படிவம் மாதா மாதம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x