Published : 05 Oct 2018 04:24 PM
Last Updated : 05 Oct 2018 04:24 PM
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.
இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. நேற்று ரூபாய் மதிப்பு 73.70 ரூபாயாக சரிந்தது. ரூபாய் மதிப்பு இன்று இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு சரிவை சந்தித்தது.
மத்திய ரிசர்வ் வங்கி வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 55 பைசா சரிந்து, 74 ரூபாய் 13 பைசாவாக வீழ்ச்சி கண்டது. வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படாததால் ரூபாய் மதிப்பு கூடுதலாக சரிந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT