Published : 24 Oct 2018 10:03 AM
Last Updated : 24 Oct 2018 10:03 AM

இந்தியாவுக்கு சர்வதேச விருது

முதலீடுகளை ஊக்கப்படுத்தியதற்காக இந்தியா சர்வதேச விருதினை பெற்றுள்ளது. இந்த விருதினை ஐக்கிய நாடுகள் சபை அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முதலீட்டாளர் மேம்பட்டு விருதினை இந்தியா தவிர, பஹ்ரைன், லெஸொதோ மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகள் பெற்றுள்ளன.

ஒரு நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு முதலீட்டு ஊக்கு விப்புகள் அவசியமாக உள்ளதால் சிறப்பான ஊக்குவிப்பும் அவசியமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

`2018 உலக முதலீட்டு கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் இந்த விருதுகள் அளிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு குழு ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 22 முதல் 26-ம் தேதி வரை இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x