Published : 05 Oct 2018 08:42 AM
Last Updated : 05 Oct 2018 08:42 AM

சந்தா கொச்சர் திடீர் ராஜினாமா: ஐசிஐசிஐ வங்கி புதிய சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி பொறுப்பேற்பு 

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்துவந்த சந்தா கொச்சர் திடீர் ராஜினாமா செய்துள்ளார். புதிய சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி பொறுப்பேற்றுள்ளார். ஐசிஐசிஐ நிர்வாகம் இந்தியப் பங்குச் சந்தையிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான சந்தா கொச்சர், தனது கணவர் தீபக் கொச்சர் மூலமாக வீடியோ கான் நிறுவனத்துக்கு வங்கியின் விதிமுறைகளை மீறி சுய ஆதா யத்துக்காகக் கடன் வழங்கியிருப் பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் வீடியோகானுக்கு 2012ல் வழங் கப்பட்ட கடனில் 80 சதவீதம் திரும்பவரவில்லை என்றும் தெரி விக்கப்பட்டது. மேலும் வீடியோ கான் வாங்கிய கடன் வாராக்கட னாகவும் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் கடன்களை விதிமுறை களை மீறி வழங்கிய குற்றச்சாட் டில் சந்தா கொச்சர் மீது விசா ரணை தொடங்கியது. விசாரணை நடந்துவரும் நிலையில், ஜூன் மாதம் முதல் சந்தா கொச்சர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், நேற்று திடீ ரென்று தன்னை பதவியிலிருந்து முன்னதாகவே விடுவிக்குமாறு பதவி விலகல் கடிதம் கொடுத் துள்ளார். அவரது ராஜினாமா கடி தத்தை ஏற்றுக்கொண்ட இயக்கு நர் குழு அவரைப் பதவியிலிருந்து விலக அனுமதித்துள்ளதாகப் பங்குச்சந்தையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இயக்குநர் குழுவிலிருந்தும் அவர் விலக்கப் பட்டார்.

மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், சந்தா கொச்சர் மீதான விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது. நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் பக்‌ஷிக்கு ஐசிஐசிஐ வங்கியில் 32 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது. இவரது நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தைகள் அனுமதி அளித்துள்ளன.

சந்தீப் பக்‌ஷி, அக்டோபர் 3, 2023 வரை ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் நீடிப்பார் என்று ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது நியமனம், ஊதியம், மற்றும் பொறுப்புகள் உள்ளிட்டவற்றின் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் வளர்ச்சியில் சந்தா கொச்சருக்கு முக்கியப் பங்கு உண்டு. 1984-ல் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றத் தொடங்கிய சந்தா கொச்சர், வங்கியின் பல பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றினார். 2006-07-ம் ஆண்டில் வங்கியை கார்ப்பரேட் மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு உயர்த்தினார். அதன்பின் வங்கியின் இணை மேலாண் இயக்குநராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் உயர்ந்தார். 2009-ல் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர், சிஇஓவாக நியமிக்கப்பட்டார். வங்கித்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்தா கொச்சருக்கு 2011-ல் மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x