Published : 14 Aug 2018 08:39 AM
Last Updated : 14 Aug 2018 08:39 AM
சத்யம் சினிமா நிறுவனத்தை ரூ.850 கோடிக்கு பிவிஆர் சினிமா நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் திரையரங்க நிறுவனமாக பிவிஆர் உருவாகியுள்ளது. இது தொடர் பாக பிவிஆர் சினிமா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது,
தென்னிந்திய அளவில் முக்கிய திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமா நிறுவனத்தை பிவிஆர் குழுமம் ரூ.850 கோடிக்கு கையகப் படுத்த உள்ளது. இந்த கையகப் படுத்தல் பங்கு மதிப்பின் அடிப்படையில் ரொக்க பரிமாற்ற மாக இருக்கும்.
கடந்த இருபது ஆண்டுகளாக சென்னையின் சினிமா அனு பவத்தை மாற்றியமைத்த நிறுவ னம் சத்யம் சினிமா என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது. 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சத் யம் சினிமா நிறுவனம் பின் னர் பல்வேறு திரையரங்குகளை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. எஸ்2, எஸ்கேப், பாலஸோ என பல திரையரங்குகள் இந்த நிறுவனத் துக்கு உள்ளன. தென்னிந்திய நகரங்கள் மற்றும் மும்பையி லும் இந்த நிறுவனத்துக்கு தற்போது 76 திரைகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 100 திரை களாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது என்று பிவிஆர் குறிப்பிட்டுள்ளது. எஸ்பிஐ சினிமாவின் ஆண்டு வருமானம் ரூ.420 கோடியாகும். ஆண்டுக்கு 17 கோடி பார்வையாளர் களை கொண்டுள்ளது.
இந்த கையகப்படுத்துதலுடன் சேர்த்து பிவிஆர் குழுமத்துக்கு 706 திரைகள் சொந்தமாக இருக்கும். நாடு முழுவதும் 60 நகரங்களில் பிவிஆர் திரையரங்குகள் உள் ளன. சர்வதேச அளவில் 7 வது மிகப்பெரிய திரையரங்க நிறுவன மான வளர்ந்துள்ளது. எஸ்பிஐ சினிமா நிறுவனத்தின் 2.22 லட்சம் பங்குகள் கையகப்படுத் தப்பட உள்ளன. முதலீட்டாளர்களிட மிருந்து ரூ.633 கோடி மதிப்பிலான 71.7 சதவீத பங்குகளை உள்ளடக் கியதாக இது இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT