Published : 29 Aug 2018 11:37 AM
Last Updated : 29 Aug 2018 11:37 AM

டீசல் விலை புதிய உச்சம்: பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று  மிகக் கடுமையாக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க மறுத்து விட்டன. இதனால் இந்தியாவில் அண்மைக் காலமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதுபோலவே பெட்ரோல் விலையும் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு 73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x