Published : 07 Aug 2018 10:01 AM
Last Updated : 07 Aug 2018 10:01 AM
பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவி யிலிருந்து இந்திரா நூயி விலகு வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 12 ஆண்டு களாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திரா நூயி செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் ரமோன் லகுவர்ட்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருக்கிறார்.
வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்திரா நூயியின் பொறுப்புகளை லகுவர்ட்டா ஏற்றுக்கொள்வார் என்றும், இயக் குநர் குழுவில் இடம் பெறுவார் என்றும் பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 62 வயதான இந்திரா நூயி, பெப்சிகோ நிறு வனத்தில் 24 ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். 2019-ம் ஆண்டின் தொடக்கம்வரை இயக்குநர் குழுவின் தலைவராக இவர் நீடிப்பார் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தில் பணியாற்றிவரும் லகுவர்ட்டா, நிறுவனத்தின் உலக அளவிலான செயல்பாடுகள், கார்ப்பரேட் உத்திகள், பொதுக் கொள்கைகள், அரசாங்க விவகாரங்கள் போன்றவற்றை கவனித்துவருகிறார். பெப்சிகோ தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஐரோப்பிய சஹாரா துணைப் பகுதிகளுக்கான தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
2006-ம் ஆண்டு இந்திரா நூயி தலைமைப் பொறுப்புக்கு வந்தபின்பு பெப்சிகோ நிறுவன பங்குகள் 78 சதவீதம் அள வுக்கு ஏற்றம் கண்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
சென்னையில் பிறந்தவரான இந்திரா நூயி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இள நிலைப் பட்டமும், கல்கத்தா ஐஐஎம்மில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன மேலாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT