Published : 21 Aug 2018 10:22 AM
Last Updated : 21 Aug 2018 10:22 AM

புதிய தொழில் கொள்கை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆய்வு

விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் தொழில்துறைக்கு வகுக்கப்பட்டுள்ள புதிய கொள்கைகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆய்வு செய்தார்.

ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பாக வர்த்தக செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்தியாவின் ஏற்று மதியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் அரசு செயலாற்றிவருவதாகவும் அவர் கூறினார்.

விவசாய ஏற்றுமதி கொள்கை

விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கான புதிய கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும் என கடந்த வாரம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 2022-ம் ஆண் டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கொள்கை வெளியிடப்பட இருக்கிறது. இதேபோல 1991-ம் ஆண்டில் வெளியான தொழில்துறை கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய கொள்கை வெளியிடப்பட இருக்கிறது. ஒழுங்குமுறை கெடுபிடி களைக் குறைத்தல், ரோபோ டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களை தொழில் துறையினர் பயன்படுத்த ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் புதிய தொழில் துறை கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.

வரைவு வெளியீடு

தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) அடுத்த 20 ஆண்டு களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x