Published : 01 Aug 2018 08:32 AM
Last Updated : 01 Aug 2018 08:32 AM
ஜோஹோ நிறுவனம் கடந்த ஓர் ஆண்டில் 36 சதவீத வாடிக் கையாளர்களை இந்தியாவில் பெற்றுள்ளதாக அந்த நிறுவனத் தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். ஜோஹோ ஒன் மென்பொருட் களின் புதிய வசதிகளை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜோஹோ புக்ஸ் வசதிகளை அறிமுகம் செய்தோம். இந்த ஒரு ஆண்டில் 36 சத வீத வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளோம். இந்திய சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு சேவை களையும் அளிப்பதால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
ஜோஹோ ஒன் சேவைகளில் 40க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. இதில் சராசரியாக 16 செயலிகளையாவது ஒவ்வொரு நிறுவனங்களும் பயன்படுத்து கின்றன. இந்தியாவில் மிக முக்கி யமான 30 நிறுவனங்களில் 17 நிறு வனங்கள் ஜோஹோ செயலியை பயன்படுத்துகின்றன. இந்தியா வில் மென்பொருள் சேவை நிறுவனங்களில்முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என்றார்.
தற்போது ஜோஹோ சேவை களில் புதிதாக தகவல் பகுப் பாய்வு, தேடல், பேக் ஸ்டேஜ் என புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்தியாவில் தகவல் திரட்டு மையத்தினை உரு வாக்கும் முயற்சிகளை மேற் கொண்டுள்ளோம். முதற் கட்ட மாக ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பை யில் இதனை அறிமுகம் செய்ய உள் ளோம். இதற்கடுத்து சென்னையில் தொடங்க உள்ளோம்.
இணைய சேவையில் உலக அளவில் வளர்ந்து வரும் சந்தை யாக இந்தியா உள்ளது. எனவே புதிய தொழில்நுட்பங்களுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் களை மாற்றியமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் வளர்ச்சி அடைவதற்கான உத்திகளை வகுத்து வருகிறோம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT