சாந்தினி சவுக் மார்க்கெட்டில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் பகுதி யில் நாட்டின் மிகப் பெரிய மொத்தவிலை மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு தினமும் 4 லட்சம் பேர் வருவர். தினமும் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

இந்நிலையில், சாந்தினி சவுக் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்குப்பின் இப்பகுதியில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரித்தது.

செங்கோட்டையிலிருந்து சாந்தினி சவுக் பகுதிக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர் வருகை குறைந்து, ரூ.400 கோடி அளவுக்கு வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு தற்காலிகமானது. விரைவில் வாடிக்கையாளர்கள் திரும்புவர் என இப்பகுதி எம்.பி பிரவீன் காந்தல்வால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in