Published : 11 Oct 2025 10:40 AM
Last Updated : 11 Oct 2025 10:40 AM
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணத்தை பார்ப்போம்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.91,400-க்கு விற்பனை ஆகிறது. இதே போல 24 காரட் தங்கம் ரூ.99,712-க்கும், 18 காரட் தங்கம் ரூ.75,600-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை: சென்னையில் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.3 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,87,000-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை உச்சம் ஏன்? - தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு அடுத்தபடியாக வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி, தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT