

சென்னை: இன்டெல் மணி நிறுவனம் தனது 6-வது பாதுகாக்கப்பட்ட, திரும்பப் பெறத்தக்க, மாற்ற இயலாத கடன் பத்திரங்களை அக்டோபர் 13-ம் தேதி வெளியிடுகிறது. அக்டோபர் 28 வரை இந்த திட்டம் இருக்கும்.
இதுகுறித்து இன்டெல் மணியின் செயல் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உமேஷ் மேனன் கூறியதாவது: பிணையுறுதி பெற்ற மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (என்சிடி) ஒவ்வொன்றும் ரூ.1,000 முகமதிப்பு கொண்டதாக இருக்கும். இந்த வெளியீடு ரூ.150 கோடி வரை அடிப்படை வெளியீட்டு அளவை கொண்டது. ரூ.150 கோடி அதிகப்படியான சந்தாவைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பத்தையும் கொண்டுள்ளது. ஆக மொத்தம், ரூ.300 கோடி வரை இந்த வெளியீட்டின் மூலம் நிதி திரட்டப்படும்.
இந்த கடன்பத்திரங்களுக்கு இன்போமெரிக்ஸ் ரேட்டிங்ஸ் மூலம் ‘IVR A-/Stable’ என்ற மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. முதலீடு 72 மாதங்களில் இரட்டிப்பாகும். ஆண்டுக்கு 12.25% வட்டி வருவாய் ஈட்டும். மேலும், இந்த கடன்பத்திரங்களை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட முன்மொழியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விண்ணப்ப அளவு ரூ.10,000 ஆகும். இவ்வாறு உமேஷ் மேனன் தெரிவித்தார்.