ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடி: சுரேஷ் பிரபு கருத்து

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடி: சுரேஷ் பிரபு கருத்து
Updated on
1 min read

தனியார் விமான நிறுவனங்கள் தங்களது சிக்கல்களுக்கு தாங்களே தீர்வுகளைக் காண வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ள நிலை யில் அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் கூறுகையில், விமான நிறுவன செயல்பாடுகளை பொறுத்தவரையில் கொள்கை களை வகுப்பது மட்டும்தான் அரசின் நிலை என்றார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நிலவும் நிதி நெருக்கடி காரணமான அதன் பங்குகள் கடும் சரிவை கண்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in