எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்
Updated on
2 min read

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்திய 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்தபடி இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒப்புதல் அளித்தன. இதில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. பிரதமர் மோடியின் எண்ணம் மிகவும் எளிமையானது. நடுத்தர குடும்பங்களுக்கு மிகப் பெரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்.

அதேநேரத்தில் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த, வருவாய் இழப்பு குறித்த மாநிலங்களின் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி வசூல் என்பது மத்திய, மாநில அரசுகளை சார்ந்தது. இதில் மாநில அரசு பாதிக்கப்படுகிறது என்றால், மத்திய அரசும் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், சாதாரண மக்கள் பயன்பட வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

நுகர்வோருக்கு பலன் சேர வேண்டும்: ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பயன்​கள் ஒவ்​வொரு நுகர்​வோரை​யும் சென்​றடை​யும் வகை​யில் தொழில்​துறை​யினர் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழிற்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், “தொழில்​துறை​யினர் பிரதமர் மோடிக்கு இரண்டு உறு​தி​மொழிகளை அளிக்க வேண்​டும்.

முதலா​வ​தாக, ஜிஎஸ்டி குறைப்​பிலிருந்து சேமிக்​கப்​படும் ஒவ்​வொரு ரூபாயை​யும் நுகர்​வோருக்கு வழங்​கு​வதற்கு தொழில்​துறை​யினர் உறு​தி​யேற்க வேண்​டும். இரண்​டாவது, நாட்டு மக்​களிடம் இந்​திய தயாரிப்​பு​களை தீவிர​மாக கொண்டு சேர்த்து அவற்​றின் விற்​பனையை ஊக்​குவிக்க உதவ வேண்​டும். இவை இரண்​டை​யும் நிறைவேற்ற பிரதமருக்கு தொழில்​துறை நிறு​வனங்​கள் உறு​தி​யளிக்க வேண்​டும்” என்​றார்​.

மீன் வியாபாரத்தில் போட்டியை ஏற்படுத்தும்: ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மீன்​வளத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மீன் உற்​பத்​தி​யில் இந்​தியா உலகள​வில் இரண்​டாவது பெரிய நாடாக உள்​ளது. இங்கு ஆண்டுக்கு 95 லட்​சம் டன்கள் மீன் பிடிக்​கப்​படு​கிறது. கடல் உணவு ஏற்​றுமதி கடந்த நிதி​யாண்​டில் ரூ.60,000 கோடியை கடந்​தது. மீன்​வளத்​துறை தற்​போது 3 கோடிக்​கும் மேற்​பட்ட மக்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு உதவு​கிறது.

மீன் எண்​ணெய், பதப்​படுத்​தப்​பட்ட மீன் வகைகளுக்​கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்​திலிருந்து 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. டீசல் இயந்​திரங்​கள், பம்​பு​கள், வலைகள் மற்​றும் மீன் பிடித் தொழில் மற்​றும் மீன் வளர்ப்பு பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி​யும் 5 சதவீத​மாக குறைந்​துள்​ள​தால், மீனவர்​கள் மீன் பிடிப்​ப​தற்​கான செலவு குறை​யும். இதனால் போட்டி ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in