ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அடுத்த ஆண்டு வெளியீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அடுத்த ஆண்டு வெளியீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையில் நேற்று நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2026-ம் ஆண்டு மத்தியில் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட்டு பங்குச் சந்தையில் நுழைய உள்ளது. மேலும், ஜியோ நிறுவனம் தனது செயல்பாடுகளை வெளிநாடுகளில் விரிவுபடுத்த உள்ளது.

அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) மேம்படுத்த உள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in