ஐஏசி ஸ்வீடன் நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா ஆட்டோகாம்ப்

ஐஏசி ஸ்வீடன் நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா ஆட்டோகாம்ப்
Updated on
1 min read

இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியியில் முன்னிலை வகிக்கும் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ், ஸ்வீடனைச் சேர்ந்த ஐஏசி ஸ்வீடன் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் வாகனங்களின் உள்புற சிஸ்டம் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்கிறது.

இதுகுறித்து டாடா ஆட்டோகாம்ப் துணைத் தலைவர் அரவிந்த் கோயல் கூறும்போது, "டாடா ஆட்டோகாம்ப் குடும்பத்துக்குள் ஐஏசி ஸ்வீடனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கையகப்படுத்தல் உலகளாவிய சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் ஐரோப்பிய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களுடனான எங்கள் உறவை வலுப்படுத்துவதற்கும் உதவும். வாகனங்களுக்கு உயர்தர உட்புற தீர்வுகளை வழங்குவதில் ஐஏசி ஸ்வீடன் ஒரு வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, மேலும் வாகனத் துறையில் புதுமை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் நிலையான, உயர்தர மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வாகன தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும்" என்றார்.

இதுகுறித்து டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் கோல்ஹட்கர் கூறும்போது, "இந்த கையகப்படுத்தல் எங்கள் நிறுவனத்தின் உலகளாவிய இருப்பு மற்றும் தொழில்நுட்ப போர்ட்ஃபோலியோவை மேம்படுத்துவதற்கான பயணத்தில் ஒரு முக்கிய படியாகும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in