6 துறைகளின் வாராக்கடன் 36 சதவீதம்: ரிசர்வ் வங்கி

6 துறைகளின் வாராக்கடன் 36 சதவீதம்: ரிசர்வ் வங்கி
Updated on
1 min read

வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 36 சதவீதம் 6 துறைகளால் ஏற்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டமைப்பு, உலோகம், ஜவுளி, ரசாயனம், பொறியியல் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவை வாராக் கடன் அளவு உயர காரணமாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாராக் கடன் அளவு 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 3.4 சதவீதமாக இருந்தது. முன்னுரிமை தொழில்களுக்கு அளிக்கப்பட்ட கடன் தொகையில் வாராக் கடன் அளவு முந்தைய ஆண்டுடன் கடந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.. கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அளவில் இத்துறைக்கு 30 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னுரிமை அல்லாத துறைகள் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு செலுத்தாத நிலை தொடர்கிறது. வங்கிகளின் செயல்பாட்டு அமைப்பையே இது சிதைக்கும் வகையில் உள்ளது என்று ஆர்பிஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

வங்கிகளின் சொத்து விற்பனை மூலம் மார்ச் காலாண்டில் திரட்டப்பட்ட தொகை ரூ12,710 கோடியாகும். முந்தைய காலாண்டில் இது ரூ. 3,570 கோடியாக இருந்தது. வெளிநாட்டு வங்கிகளின் வாராக் கடன் அளவும் 3 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in