Published : 07 Aug 2014 10:00 AM
Last Updated : 07 Aug 2014 10:00 AM

எஸ்.கே.ராய் - இவரைத் தெரியுமா?

$ இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தலைவர். கடந்த வருடம் ஜூன் 29-ல் பொறுப்பேற்றதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

$ 1981-ம் ஆண்டில் நேரடி அலுவலராக எல்.ஐ.சி.யில் இணைந்தார். ஏரியா மேலாளர், மண்டல மேலாளர், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், நிர்வாக இயக்குநர் என பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.

$ ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், சட்டப்படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

$ நடப்பு நிதி ஆண்டில் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

$ இப்போதைக்கு ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை ஆகியவை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் ஐடி, வங்கி மற்றும் பார்மா பங்குகள் எல்.ஐ.சி. விரும்பி முதலீடு செய்யும் துறைகள் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x