மின் கட்டணம் அதிகரிப்பால் அட்டை பெட்டி விலை 15% உயர்வு

மின் கட்டணம் அதிகரிப்பால் அட்டை பெட்டி விலை 15% உயர்வு
Updated on
1 min read

கோவை: மின் கட்டணம், பேப்பர் விலை அதிகரித்துள்ளதால் அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளதாக, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல 29-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். செயலாளர் சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வெள்ளைக்கண்ணு வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பேப்பர் உற்பத்திஆலைகள் 3 முறை விலையை உயர்த்திஉள்ளன. மேலும், மின் கட்டணம்அபரிமிதமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் நிலவுவதால், அட்டைப் பெட்டிதயாரிப்புத் தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, அட்டைப் பெட்டிகளின் விலை 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in