Published : 18 Jun 2018 09:42 AM
Last Updated : 18 Jun 2018 09:42 AM

பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான் உற்பத்தி வரியை குறைக்கும் பட்சத்தில் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என மூடிஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. இல்லை எனில் உற்பத்தி வரியை குறைப்பதற்கு ஏதுவாக அரசின் செலவுகளும் குறைக்கப்பட வேண்டும் என இந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக மூடி’ஸ் கூறியிருப்பதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அரசுக்கு ரூ.13,000 கோடி இழப்பு ஏற்படும். இந்தியாவின் மிகப்பெரிய சவால் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்துவதாகும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவின் தரமதிப்பீடு பிஏஏ2 என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. பிஏஏ2 பிரிவில் உள்ள நாடுகளின் சராசரி கடன் ஜிடிபி விகிதம் 50 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் கடன் ஜிடிபி விகிதம் 70 சதவீதமாகும். இந்தியாவின் தரமதிப்பீடு உயர்த்தப்பட வேண்டும் என்றால் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. வட்டி விகித உயர்வு காரணமாக பணவீக்கம் குறையும். நீடித்த வளர்ச்சி இருக்கும் என நம்புகிறோம் என மூடி’ஸ் தெரிவித்திருக்கிறது.

கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பணவீக்கம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் வட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x