Published : 28 Jun 2018 09:08 AM
Last Updated : 28 Jun 2018 09:08 AM
ஜெர்மனியை சேர்ந்த ஹெச் அண்ட் டி இன்டர்நேஷனல் குழுமத்தை இந்தியாவின் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஐடி மற்றும் இன்ஜினீயரிங் பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்னும் தகவல் அறிவிக்கப்பட்டவில்லை. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த இணைப்பு முடிவடையும் என பிஎஸ்இ-க்கு அனுப்பிய கடிதத்தில் ஹெச்சிஎல் தெரிவித்திருக்கிறது.
ஜெர்மனியில் உள்ள முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான ஐடி சேவையை ஹெச் அண்ட் டி இன்டர்நேஷனல் குழுமம் வழங்கி வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. 1996-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு ஜெர்மனி மிக முக்கியமான சந்தையாகும். ஹெச் அண்ட் டி இன்டர்நேஷனல் வாங்கப்பட்டதை அடுத்து ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஜெர்மனி சந்தை முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.
அங்கு நுழைவதற்கு இதுதான் சரியான சமயம் என ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆஷிஷ் குப்தா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT