Published : 03 May 2018 08:31 AM
Last Updated : 03 May 2018 08:31 AM
ஏர் ஏசியா இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் அமர் அப்ரால் இந்திய பொறுப்பில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. அடுத்த மாதத்தில் இந்திய பிரிவில் இருந்து விலகுகிறார். இவரது குடும்பம் மலேசியாவில் இருக்கிறது. குடும்பத்துக்கு மிக அருகில் இருக்க விரும்புதாக இவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஏர் ஏசியா குழுமத்தின் தலைமையாகமான மலேசியாவில் யுத்தி சார்ந்த புதிய திட்டங்களில் பணியாற்ற இருக்கிறார்.
இந்த நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மித்து சாண்டில்யா தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இரு ஆண்டுகளுக்கு முன்பு அவர் விலகியதை அடுத்து அமர் அப்ரால் நியமனம் செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT