

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது. இதோடு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. அதில் முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டுக்கு முந்தைய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் முதலமைச்சர்கள், பிஹார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் மாநிலங்களின் அமைச்சர்கள், மத்திய நிதியமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
சரியான நேரத்தில் வரிப் பகிர்வு, மானியங்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதற்காக வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிப்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட பரிந்துரைகள்: மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள்: