மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்வு

மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்வு
Updated on
1 min read

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 19-ம் தேதி ரூ.55,120 ஆகவும் அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஒரு பவுன் ரூ.53 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இதன்படி, நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.6,780-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,240-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை பவுன் ரூ.58,000-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிரடியாக விலை அதிகரித்திருப்பதை கண்டு நகை வாங்குபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.98.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.98,500 ஆக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in